Sport;s

Friday 27 July 2012

N.S.C -Neelagama Sports Club



கடந்த  மே 21 ம் திகதி 2012 அன்று பெல்மதுள்ள தோட்டம் இல 2 ல் வைபவரிதியாக இளஞர் மன்றம் மற்றும் விளையாட்டு கலகம் போன்றன பதிவு  செய்யும் நிகழ்வு  வெகு சிறப்பாக நடைப்பெற்றது . அத்தோடு இன் நிகழ்வில் கிராம சேவகர் , தோட்ட உதவி அதிகாரி மற்றும் , இளஞர் , விளையாட்டு கலக  ,மற்றும் சமூர்த்தி அதிகாரி ,தோட்ட தலைவர்கள்,   இளஞர் , யுவதிகள் கலந்துக்கொண்டனர் . 

Wednesday 27 July 2011

வாழ்ந்து பார்...


சறுக்கி விழுவதெல்லாம்
நிமிர்ந்து நிற்பதற்கே...
வாழ்க்கை கூட வாழ்ந்து பார்ப்பவர்க்கே.....
தோல்விகள் எல்லாம்
வெற்றியின் முதற்படியே..
வாழ்ந்து பாரடா மானிடா.....

முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.
'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

Monday 25 July 2011

வெற்றி வானம்

மனிதனே!
நிறைவாகும் வரை
மறைவாக இரு...
நிறைவுகளை உரைக்காதே!
நிச்சயம் ஊர் உணரும்

குறைவுகளால் கரையாதே
குளித்துவிடு!
அழுக்குகள் அகல நீ
அழகாவாய்...

உயரே பறக்கும்
உரக்க சிந்தனை கொள்!
சிறகுகளை விரி...

உயரும் வழியில்
உன்னை உயர்த்தும்
சிறகுகளை மறக்காதே!

நல்வழியில் செல்!
உயிர்களுக்கு துயர் இழைக்காதே!

ஏர் கைக்கொண்டால்
இரத்தமும் வேர்வைதான்
வாள் கைக்கொண்டால்
வேர்வையும் இரத்தம்தான்!
இரத்தத்துளி குலைக்கும்
வேர்வைத்துளியே விளைவிக்கும்!

உன்வழி தேர்வு செய்!
உண்மை உணர்
உயர் எண்ணம் வளர்!

உன் காலில் நில்!
விவேகம் விதைத்து
இடைவிடாது உழைத்து விடு!

உறக்கம் தேவைதான்
இமை விழிக்க மறுக்கும்போது!

உழைத்த களைப்பில் நீ
உறங்கும்போது...
உன் கனவுகள் நனவாகும்!

மயக்கம் தவிர்...
துவக்கம் உன்னில்தான்!
உன் விழிகளில் மின்னல்தான்!

உன் விழி உலர
உண்மைகள் உணர
உள்ளம் உறுதி கொள்ள

வெற்றிகள் எளிதாகும்
வாழ்வே இனிதாகும்!
உயர்வு உன்னைச் சேரும்
வெற்றி வானம் வசப்படும்!!

வானம் வசப்படும்!!

மனிதனே!
நிறைவாகும் வரை
மறைவாக இரு...
நிறைவுகளை உரைக்காதே!
நிச்சயம் ஊர் உணரும்
குறைவுகளால் கரையாதே
குளித்துவிடு!
அழுக்குகள் அகல நீ
அழகாவாய்...
உயரே பறக்கும்
உரக்க சிந்தனை கொள்!
சிறகுகளை விரி...
உயரும் வழியில்
உன்னை உயர்த்தும்
சிறகுகளை மறக்காதே!
நல்வழியில் செல்!
உயிர்களுக்கு துயர் இழைக்காதே!
ஏர் கைக்கொண்டால்
இரத்தமும் வேர்வைதான்
வாள் கைக்கொண்டால்
வேர்வையும் இரத்தம்தான்!
இரத்தத்துளி குலைக்கும்
வேர்வைத்துளியே விளைவிக்கும்!
உன்வழி தேர்வு செய்!
உண்மை உணர்
உயர் எண்ணம் வளர்!
உன் காலில் நில்!
விவேகம் விதைத்து
இடைவிடாது உழைத்து விடு!
உறக்கம் தேவைதான்
இமை விழிக்க மறுக்கும்போது!
உழைத்த களைப்பில் நீ
உறங்கும்போது...
உன் கனவுகள் நனவாகும்!
மயக்கம் தவிர்...
துவக்கம் உன்னில்தான்!
உன் விழிகளில் மின்னல்தான்!
ன் விழி உலர
உண்மைகள் உணர
உள்ளம் உறுதி கொள்ள
வெற்றிகள் எளிதாகும்
வாழ்வே இனிதாகும்!
உயர்வு உன்னைச் சேரும்
வெற்றி வானம் வசப்படும்!!